9 Dec 2011

விண்டோஸ் டிஸ்பிளே சில விளக்கங்கள்



கம்ப்யூட்டருக்கு புதியவரா நீங்கள்!
கம்ப்யூட்டர் வாங்கியபோது திரை எப்படி தோன்றியதோ, அப்படியே சிலர் வைத்திருப்பார்கள். பலருக்கு வண்ணக் கலவை பிடிக்காமல் இருக்கலாம். சிலருக்கு அதில் உள்ள எழுத்துக்களைப் பார்த்து படிப்பதில் சிரமம் இருக்கலாம். இருந்தாலும் கம்ப்யூட்டர் இப்படித்தான் காட்சி அளிக்கும் என்று எண்ணி அப்படியே பயன்படுத்துவார்கள். அதெல்லாம் வேண்டாம். நம் விருப்பப்படி திரைத் தோற்றத்தினை அமைத்துக் கொள்ளலாம். இதனைத்தான் விண்டோஸ் டிஸ்பிளே என்று கூறுகிறார்கள். இவற்றில் பல அம்சங்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் அவை என்ன மற்றும் எதனைக் குறிக்கின்றன என்று அறிந்து கொண்டால், நம் கம்ப்யூட்டர் நம் மனதிற்கேற்றபடியான தோற்றத்தில் இருக்கும். அவை குறித்து இங்கு காணலாம்.

உடைகள் வாங்கும்போது கவனிக்க.........


 எப்போதும் உடைகள் வாங்கும்போது விலையைத்தவிர வேறு எதையும் நாம் பார்ப்பதில்லை (நானுந்தேன்). ஆனால் விலையைவிட இன்னொன்று முக்கியமானதுஅது அந்த உடை எங்கு தயாரிக்கப்பட்டதுஅதை எப்படித் துவைப்பது. (எனக்கு இந்த கவலையே வேண்டாம் - துவைப்பதே இல்லையே!)

அதை பற்றி இங்கு பார்ப்போம்.
    ஒவ்வொரு ஆடையும் உள்ளும் அதனுடைய தயாரிக்கப்பட்ட இடமும்அதன் நூலின் வகைகளான பருத்தி (காட்டன்) அல்லது பாலியஸ்டர் இன்னபிற நூலின் வகைகளும் குறிக்கப்பட்டிருக்கும்.



    ஆடை தயாரிக்கப்பட்ட இடம் சீனா என்றால் அதன் விலை குறைவாகவும்எகிப்து போன்ற இடங்கள் தரமானைவையாகவும்விலை சற்று அதிகமாகவும் இருக்கும். கோடை காலங்களில் பருத்தி ஆடைகள் உடலுக்கு உகந்தவை.

உலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie


பதிவு கொஞ்சம் போரடிக்கிற மாதிரி தோன்றும். முழுதும் படித்துப் பார்த்தால் வியப்பூட்டும் அறிவியல் உண்மைகளை அறிய முடியும்.

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

----------------------------------
இந்த பதிவிற்குள் செல்லும்முன் ஒருவர் புரிந்துக்கொள்ள வேண்டிய வார்த்தைகள்:

1. உயிரினப்படிமங்கள் (Fossils) - விலங்குகள் மற்றும் தாவரங்களின் இயற்கையாக பாதுகாக்கப்பட்ட மிச்சங்கள்/ஆதாரங்கள்.     

2. தொல்லுயிரியல் (Palaeontology) - உயிரினப்படிமங்கள் குறித்து பேசும் துறை (Study of Fossils).

3. தொல்லுயிரியலாளர் (Paleontologist) - உயிரினப்படிம ஆய்வுகளில் தனித்துவம் பெற்றவர்.
---------------------------------

                    அறிவியல் ஆய்விதழான Nature-ரின் செய்திகள் பிரிவு, சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட கட்டுரையின் தலைப்பு பரிணாம உலகை திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றது. அது,
Archaeopteryx no longer first bird - Matt Kaplan, Nature news, 27th July 2011.
இனி (உலகின்) முதல் பறவையல்ல அர்கீயாப்டெரிக்ஸ் - (Extract from the original quote of) Matt Kaplan, Nature news, 27th July 2011.


நீங்கள் மேலே பார்த்ததுக்கூட பரவாயில்லை. இந்த செய்தி வெளியான அடுத்த நாள் Nature இதழில் வெளியான இதுக்குறித்த மற்றொரு கட்டுரையின் தலைப்பு பலரை திக்குமுக்காட வைத்திருக்கும்.  
An icon knocked from its perch - Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288.
ஒரு முக்கிய சின்னம் (அர்கீயாப்டெரிக்ஸ்) தன்னுடைய இருப்பிடத்திலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டது - (extract from the original quote of) Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288.


சரி, ஏன் இந்த அர்கீயாப்டெரிக்ஸ் என்னும் உயிரினத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம்? 

யு.எஸ்.பி. டிரைவில் குரோம் ஓ.எஸ்.


குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து தகவல்கள் வந்தன. ஆனால் நாம் நெட்புக் கம்ப்யூட்டர்களிலோ அல்லது மற்றவகை கம்ப்யூட்டர்களிலோ பயன்படுத்தும் வகையில் ரெடியாக அது இன்னும் கிடைக்கவில்லை. இந்த சிஸ்டம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் சோர்ஸ் கோட் வரிகள் தான் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் அண்மையில் டவுண்லோட் செய்திட உதவும் டாரண்ட் (Torrent)தளங்களில், யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து நெட்புக் கம்ப்யூட்டர்களை இயக்கக் கூடிய அளவில் குரோம் ஓ.எஸ். கிடைப்பதாக செய்திகள் வந்துள்ளன. Engadget தளத்தில் இயங்கும் சிலர், இதனைப் பெற்று Dell Vostro A90 என்ற நெட்புக் கம்ப்யூட்டரில் இயக்கியதாகத் தகவல் தரப்பட்டுள்ளது. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பூட்டிங் நேரம் 22 விநாடிகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். உடனே இணைய தளத்தினை பிரவுஸ் செய்வதற்கு முடிந்ததாகவும் அறிவித்துள்ளனர்.
ஆனால் இந்த சிஸ்டத்தில் உள்ள டிவைஸ் டிரைவர்கள் அனைத்தும் வடிவமைப்பின் தொடக்க நிலையிலேயே உள்ளதாகத் தெரிகிறது. எனவே குரோம் சிஸ்டம் இயக்கத்தில் உங்கள் கம்ப்யூட்டரின் சில பகுதிகள் எதிர்பார்க்கும் வேகத்தில் இயங்காது எனத் தெரிகிறது. நீங்களும் குரோம் ஓ.எஸ். அதிகாரப் பூர்வமாக மக்களுக்கு வழங்கப்படும் முன், அதனைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என எண்ணினால், http://carbon.hexxeh.net/chromiumos/ என்ற முகவரியில் கிடைக்கும், பூட் செய்யக் கூடிய இமேஜை டவுண்லோட் செய்து, பிளாஷ் டிரைவில் பதிந்து, உங்கள் நெட்புக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம். விண்டோஸ், மேக், லினக்ஸ் இயக்கங்கள் உள்ள கம்ப்யூட்டரில் இதனை எப்படிப் பயன்படுத்துவது என்ற குறிப்புகளும் இங்கே தரப்பட்டுள்ளன. அதற்கு முன் குரோம் சிஸ்டத்தில் எவை எவை இயங்கும் என்ற பட்டியலை கூகுள் தளத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

டிப்ஸ் கதம்பம்


எக்ஸெல் துல்லியம்
நாம் ஒரு எண்ணை எழுதுகையில் எப்படி எழுதுகிறோமோ, அதே அளவில் அப்படியே நம் நினைவில் கொள்கிறோம். எடுத்துக் காட்டாக, 2.76 என எழுதினால் இந்த எண் இரண்டு தசம ஸ்தானத்துடன் (டெசிமல் பிளேஸ்)மட்டுமே கொள்கிறோம். ஆனால் எக்ஸெல் நீங்கள் எத்தனை ஸ்தானங்களை எழுதினாலும் அது மொத்தமாக 15 தசம ஸ்தானங்களை உருவாக்கிக் கொள்ளும். அதாவது 2.76 என்பதற்குப் பின்னால் மேலும் 13 சைபர்களைச் சேர்த்துக் கொள்ளும். இதனால் தான் சில வேளைகளில் நமக்கு மிகத் துல்லியமாக பல தசமஸ்தானங்களில் விடை கிடைக்கிறது.
வேர்ட் பார்மட்டிங் நீக்கல்
வேர்ட் டெக்ஸ்ட்டில் சில குறிப்பிட்ட சொற்களை மற்ற சொற்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட போல்டு, அடிக்கோடு, சாய்வு மற்றும் சில பார்மட்களில் அமைத்திருப்போம். இவற்றை மொத்தமாக நீக்க வேண்டுமென்றால், இதனைத் தேர்வு செய்து மெனு பார் சென்று ஒவ்வொரு ஐகானாகக் கிளிக் செய்வோம். இதற்குப் பதிலாக இரண்டு ஷார்ட் கட் கீகளைப் பயன் படுத்தலாம். பார்மட்டிங் நீக்கி எளிமையான டெக்ஸ்ட் மட்டுமே தேவைப்படும் சொற்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். பின் கண்ட்ரோல் + ஷிப்ட்+இஸட் (Ctrl+Shft+Z) அழுத்துங்கள். மொத்தமாக பார்மட்டிங் அனைத்தும் நீக்கப்படும். வேர்ட் ResetChar என்ற கட்டளையை இந்த இடத்தில் அமல்படுத்துகிறது. இதனை கண்ட்ரோல் + ஸ்பேஸ் பார் அழுத்தியும் மேற்கொள்ளலாம். இதே போல ஏதேனும் பாரா பார்மட்டிங் செய்திருந்தால், அந்த பார்மட்டினை நீக்க பாராவினை செலக்ட் செய்து கண்ட்ரோல் + க்யூ (Ctrl+Q) அழுத்துங்கள். டெக்ஸ்ட் ஒன்றுக்கு சாதாரண நார்மல் ஸ்டைல் இருந்தால் போதும் என்று எண்ணினால், உடனே அதனைத் தேர்ந் தெடுத்து கண்ட்ரோல்+ஷிப்ட்+என் (Ctrl+Shft+ N) அழுத்தவும்.
வேர்டில் டூல்பார் ஐகானில் படம், டெக்ஸ்ட் மாற்ற
வேர்டில் மெனு பார் பல டூல் பார்களுடன் காட்சி அளிக்கிறது. இதனை நம் விருப்பப்படி அமைத்திடும் வகையில் வளைந்து கொடுக்கும் தன்மையினை வேர்ட் அளித்திருக்கிறது. எடுத்துக் காட்டாக, டூல்பாரில் உள்ள படத்தை மாற்றி அமைக்கலாம். அதில் உள்ள சொற்கள் வேண்டாம் என்றால் எடுத்துவிடலாம்.
இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
1.வேர்ட் தொகுப்பை இயக்கியபின், ஸ்கிரீனில் தெரியும் டூல்பாரில், மாற்ற விரும்பும் டூல் பாரில் அல்லது டூல் ஜகானில் ரைட்கிளிக் செய்திடவும். வேர்ட் உடனே ஒரு கான்டெக்ஸ்ட் மெனு (Context Menu) ஒன்றை அளிக்கும்.
2.இந்த மெனுவில் கீழாக உள்ள Customize  என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். உடன் வேர்ட் கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் Toolbars என்ற டேப் செலக்ட் செய்யப்பட்டிருக்கும்.
3. இனி மீண்டும் வேர்ட் மெனு பார் சென்று மாற்ற விரும்பிய டூல்பார் பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். இவை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
4. இப்போது வேறு வகையான காண்டெக்ஸ்ட் மெனு கிடைக்கும். இதில் Change Button Image என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் வேர்ட் நீங்கள் தேர்ந்தெடுக்க பல கிராபிக் இமேஜ்களைக் காட்டும்.
5. எந்த கிராபிக் இமேஜைத் தற்போதுள்ள படத்திற்குப் பதிலாகப் பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக் கவும்.
6.இனி அதில் உள்ள டெக்ஸ்ட் உங்களுக்கு வேண்டாம் என்றால் தொடர்ந்து கீழே தரப்பட்டுள்ள வழிகளைப் பின்பற்றவும். இல்லை என்றால் 9ல் தரப்பட்டுள்ள செயலுக்குச் செல்லவும்.
7.மீண்டும் மாற்ற விரும்பும் டூல்பார் பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். Context Menu  கிடைக்கும்.
8. Context Menu  வில் Default Style என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இனி டூல்பார் பட்டனில் இமேஜ் மட்டும் இருக்கும்.
9.Customize  டயலாக் பாக்ஸிலிருந்து வெளியேற குளோஸ் பட்டனை அழுத்தவும். இனி நீங்கள் மேற்கொண்ட மாற்றங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டிருப் பதனைக் காணலாம்.
அனைத்து பைல்களையும் குளோஸ் செய்திட
எக்ஸெல் தொகுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களைத் திறந்து பயன்படுத்திய பின்னர், எக்ஸெல் விட்டு வெளியேறாமல் அனைத்து பைல்களையும் குளோஸ் செய்திட விரும்பினால், ஷிப்ட் கீ அழுத்தியவாறு பைல் மெனு கிளிக் செய்திடவும். இவ்வாறு கிளிக் செய்திடுகையில் சாதாரணமாக ஒரு பைலைக் கிளிக் செய்திட கிடைக்கும் குளோஸ் கட்டளை குளோஸ் ஆல் எனத் தெரிவதனைக் காணலாம். அதே போல சேவ் கட்டளை சேவ் ஆல் என்று கிடைப்பதைக் காணலாம். அனைத்தையும் மொத்தமாக சேவ் செய்துவிட்டு மொத்தமாக மூடிவிடலாம்.
எக்ஸெல் – மற்றவர்கள் மாற்றாமல் இருக்க
எக்ஸெல் தொகுப்பில், நீங்கள் தயாரிக்கும் ஒர்க் புக்கினை நீங்கள் மட்டுமே பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என ஒரு கட்டத்தில் எண்ணலாம்; கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்ற யூசர்கள் அதில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடாது என்று எண்ணினால், அதனை அவ்வாறே செட் செய்திடலாம்.
Tools  மெனுவில் Share Workbook என்பதனைத் தேர்ந்தெடுத்தால் எக்ஸெல் ஷேர் ஒர்க்புக் டயலாக் பாக்ஸைக் காட்டும். அதில் Allow Changes என்ற வரிக்கு முன் உள்ள பாக்ஸில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
வேர்ட்–பார்மட் மட்டும் பேஸ்ட்
குறிப்பிட்ட சில சொற்களை டாகுமெண்ட் முழுவதும் நீங்கள் விரும்பும் பார்மட்டில் மாற்ற விரும்புகிறீர்கள். எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட் ஒன்றில் நிறுவனங்கள் பெயர் தொடர்ந்து வருகின்றன. இவை அனைத்தையும் குறிப்பிட்ட பாண்ட் வகையில் அடிக்கோடுடன் அமைக்க விரும்புகிறீர்கள். இதனை ஒரு நிறுவனத்தின் பெயரில் மாற்றி அமைக்கவும். பின்னர் இதனை அப்படியே காப்பி செய்தால் இதே நிறுவனத்தின் பெயர் அப்படியே பார்மட்டிங் சேர்ந்து காப்பி ஆகி அடுத்த இடத்தில் உள்ள நிறுவனத்தின் பெயருக்குப் பதிலாக பேஸ்ட் செய்திடுகையில் உட்கார்ந்துவிடும். அதற்குப் பதிலாக நாம் விரும்புவது பார்மட்டிங் மட்டும் அந்த புதிய இடத்தில் உள்ள நிறுவனப் பெயருக்கு அப்ளை ஆக வேண்டும். இப்படியே அனைத்து நிறுவனங்களின் பெயருக்கு அப்ளை ஆக வேண்டும். இதற்கான ஷார்ட் கட் கீகளைப் பார்க்கலாம்.
1.முதலில் என்ன வகையில் பார்மட்டிங் செய்திட வேண்டுமோ அதனை மேற்கொள்ளவும். முதல் நிறுவனத்தின் பெயரைத் தேர்ந்தெடுத்து அதில் பார்மட்டிங் வேலைகளை மேற்கொள்ளவும். எடுத்துக் காட்டாக இவற்றை இன்னொரு பாண்ட்டில், போல்ட் மற்றும் சாய்வாக அமைக்கலாம். 2.அமைத்த பின்னர் அதனைத் தேர்ந்தெடுத்து பின் கண்ட்ரோல் + ஷிப்ட்+சி (Ctrl+Shift+C) அழுத்தவும். இப்போது பார்மட்டிங் சமாச்சாரங்கள் மட்டும் காப்பி செய்யப்படும்.
3. பின் இந்த பார்மட்டிங், எந்த சொற்களில் வேறு இடத்தில் அமைய வேண்டுமோ, அந்த சொற்களைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்த பின்னர் கண்ட்ரோல் + ஷிப்ட்+வி (Ctrl+Shft+V)  அழுத்தவும். அந்த சொற்கள் மாற்றப்படாமல் பார்மட்டிங் மட்டும் அதில் ஏற்றப்படும். இப்படியே டாகுமெண்ட் முழுவதும் மாற்ற வேண்டிய அனைத்து சொற்களையும் தேர்ந்தெடுத்து கண்ட்ரோல்+ஷிப்ட்+வி அழுத்தி பார்மட்டிங் மாற்றலாம்.
வேர்ட் – பாராவினை நகர்த்தி அமைக்க
பெரிய டாகுமெண்ட் ஒன்றைத் தயார் செய்கிறீர்கள். அதன் பின் சில பாராவை அதன் இடத்திலிருந்து நகர்த்தி இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்ல எண்ணுகிறீர்கள். இதற்கு பாராவை செலக்ட் செய்து இழுக்க வேண்டாம்; காப்பி அல்லது கட் செய்து பேஸ்ட் செய்திட வேண்டாம். எந்த பாராவினை மாற்ற வேண்டுமோ அதில் ஊடாகக் கர்சரைக் கொண்டு நிறுத்தி ஷிப்ட் மற்றும் ஆல்ட் கீகளை அழுத்திக் கொண்டு நீங்கள் விரும்பும் திசை நோக்கிய ஆரோ கீகளை அழுத்தவும். பாரா அப்படியே நகர்ந்து சென்று நிற்கும். எந்த சூழ்நிலையிலும் பழைய படி இருக்க வேண்டும் என எண்ணினாலும் அப்படியே கொண்டு வரலாம். அல்லது கண்ட்ரோல் + இஸட் பயன்படுத்தலாம்.
வேர்டில் தேதியும் கிழமையும்
வேர்ட் டாகுமெண்ட்டில் தேதியும் கிழமையும் அமைக்கவும், அவை தாமாக அவ்வப்போது அப்டேட் செய்திடவும் இத்தொகுப்பில் வழி உள்ளது. இதற்கு தேதியையும் கிழமையினையும் டைப் செய்திடத் தேவையில்லை. டாகுமெண்ட்டைத் திறந்து எங்கு தேதி மற்றும் கிழமை அமைய வேண்டுமோ, அங்கு கர்சரை நிறுத்தவும். பின்னர் மெனு பார் சென்று இன்ஸெர்ட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Date and Time” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது “Date and Time”   டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் தேதியும் கிழமையும் எந்த பார்மட்டில் அமைக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் 16 வகைகள் தரப்பட்டிருக்கும். சில பார்மட்டுகளில் நேரமும் அமைக்கப்படும் வகையில் தரப்பட்டிருக்கும். இதில் நீங்கள் விரும்பும் பார்மட்டினைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் பார்க்கும் போது என்ன தேதி, கிழமை மற்றும் நேரம் உங்கள் கம்ப்யூட்டர் படி உள்ளதோ, அவை பார்மட் தேர்வில் காட்டப்படும்.
இதில் இன்னொரு அருமையான வசதியும் உள்ளது. நீங்கள் உங்கள் டாகுமெண்ட்டில் அமைக்கப்படும் தேதி தானாக அப்டேட் செய்யப்பட வேண்டும் என எண்ணினால் கீழாக “Update automatically”  என்று இருக்கும். இதில் டிக் அடையாளத்தினை அமைத்து பின் ஓகே கிளிக் செய்து வெளியேறலாம். பின் அந்த டாகுமெண்ட்டில் தேதியும் கிழமையும், நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால் நேரமும் அமையும்.

இணையப் பக்க அச்சில் உங்கள் பெயர்


இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இணைய தளங்களில் பிரவுஸ் செய்திடும் பக்கங்களை அப்படியே அச்சுக்கு அனுப்புகிறீர்களா! அப்படியானால் அதில் உங்கள் பெயர், நீங்கள் விரும்பும் தலைப்பு ஆகியவற்றையும் அச்சிடலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, தானாகவே சில விஷயங்களைத் தலைப்பில் அச்சிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஹெடரில் பக்கத்தின் தலைப்பு மற்றும் பக்க எண் / மொத்த பக்க எண் ஆகியவை அச்சிடப்படும். புட்டரில் இணைய தள முகவரி மற்றும் சுருக்கமாக தேதியும் அச்சிடப்படும். இது போல மாறா நிலையில் உள்ளதை மாற்றி நாம் நம் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தலாம். ஏனென்றால் நாம் அதிக பக்கங்களை அச்சிடுவதாக இருந்தால் கூடுதலான சில தகவல்களை அவற்றில் சேர்க்க விரும்பலாம். எடுத்துக் காட்டாக நெட்வொர்க் பிரிண்டர் என்றால் உங்களுக்கான பக்கங்களில் உங்கள் பெயர் இணைக்க விரும்பலாம். அப்போதுதான் மற்றவர்களும் அச்சுக் கொடுக்கும் வேளையில் உங்கள் பக்கங்களைத் தனியே பிரித்து எடுக்க வசதியாக இருக்கும்.
இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செட் செய்திடவும்.
1. பேஜ் செட் அப் டயலாக் பாக்ஸ் செல்லவும். மெனு பாரில் பைல் மற்றும் பேஜ் செட் அப் என இதனைப் பெறலாம். கமாண்ட் பார் கிடைத்தால், பிரிண்டர் பட்டனை அழுத்தி அதில் பேஜ் செட் அப் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இரண்டும் கிடைக்கவில்லை என்றால், Alt+F  அழுத்திப் பின் க் அழுத்தவும்.
2. பேஜ் செட் அப் டயலாக் பாக்ஸ் உங்களுக்கு இப்போது கிடைக்கும். இதில் ஹெடர்ஸ் அன்ட் புட்டர்ஸ் என்ற பிரிவில் இரண்டு பிரிவுகள் இருப்பதைக் காணலாம். அவை ஹெடர் மற்றும் புட்டர். இவை ஒவ்வொன்றிலும் முதலில் விரிக்கையில் இடது பக்கம் என்ன டெக்ஸ்ட் அச்சாகும் என்பது காட்டப்படும். இரண்டாவதாக விரிக்கையில் நடுவில் அச்சாவதும், மூன்றாவதாக விரிக்கையில் வலது பக்கம் அச்சாவதும் காட்டப்படும். இவற்றில் நாம் தேர்ந்தெடுக்க ஆப்ஷன்களாகக் கீழ்க்கண்டவை காட்டப்படும்

கனவுகளைப்பற்றி ஒரு விரிவான பார்வை!


o  கனவுகள் என்றால் என்ன?
o  ஏன், எப்போது, எப்படிக் காண்கிறோம்?
o  அவற்றின் பலன்கள் என்ன?
o  அவை எதிர்காலத்தை அறிவிக்கின்றனவா?
o  கனவுகள் உணர்வுரீதியாக பாதிப்பை ஏற்படுத்துமா?
o  நாம் எப்போது கனவு காண்கிறோம்?
o  அடிக்கடி கனவுகள் வருமா?
o  கனவுகள் முக்கியமானவையா?
o  கனவு காணுவதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன?
o  யாரெல்லாம் கனவு காண்கிறார்கள்?
o  போதை மருந்துகள் கனவுகளைத் தூண்டுமா?
o  கண்பார்வையில்லாதவர்கள் கனவு காண்பார்களா?
o  அவர்கள் கனவுகள் எப்படியிருக்கும்?
o  குழந்தைகள் காணும் கனவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும்?
o  கனவுகள் ஏன் நினைவில் நிற்பதில்லை?
o  கனவுகள் நினைவில் நின்றால் அதற்குக் காரணம்?
o  கனவுகள் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்கின்றனவா?
இதுபோன்ற பலவகைக் கேள்விகளுக்கு இக்கட்டுரையில் விடை காண்போம்.

கனவுகளை நாம் இரண்டு வகையில் பொருள் கொள்கிறோம். நம் எதிர்காலம், நமது லட்சியங்கள், அவைகளை அடைவதற்கான வழிமுறைகளை எண்ணிப் பார்ப்பதும் ஒருவகையான கனவுதான். இந்தக் கனவை நாம் விஷன் (vision) எனச் சொல்கிறோம். நமது அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்களைக் காணச் சொன்னது 'சுபிட்சமான எதிர்கால இந்தியாவைப் பற்றிய காட்சியைத்தான்.'
மற்றொரு வகைக் கனவுகள்தாம் நாம் கண்ணை சிறிது அசந்தாலும் மூடிய கண்களுக்குள் படமாக ஓடுவது.

மனிதன் குரங்கில் இருந்து பிறக்கவில்லை


மனிதன் குரங்கில் இருந்து பிறக்கவில்லை (டார்வின் கோட்பாடு தகர்க்கப்பட்டுள்ளது)
CHAD எனும் நாட்டில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட படிம மண்டை ஓடு பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மறுக்கிறது. டார்வின் கொள்கைகளை பின்பற்றும் விஞ்ஞானிகள் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையை இது ஆட்டங்கான வைத்துள்ளது என்று கூறுகின்றனர். ‘குரங்கிலிருந்து மனிதன் வந்தான்’ எனும் கட்டுக்கதை மீண்டும் ஒருமுறை வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய ஆபிரிக்க நாடான (CHAD) டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய படிம மண்டை ஓடு மனிதனின் பரிணாம வளர்ச்சி சம்பந்தமான கோட்பாட்டிற்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. உலக புகழ் பெற்ற விஞ்ஞான பத்திரிக்கைகள் மற்றும் சஞ்சிகைகளில் இதற்கு பெரும் பகுதி ஒதுக்கப்பட்டன. ‘மனிதன் குரங்கு போன்ற ஒரு உயிரினத்திலிருந்து தான் பரிணாம வளர்ச்சியடைந்தான்’; என்ற கடந்த 150 வருடங்களாக டார்வினை பின்பற்றுபவர்களால் பிடிவாமாக கூறப்பட்டுவந்த வாதங்களை இந்த புதிய படிமம் வீழ்த்திவிட்டது. மைகேல் பிரண்ட், என்ற பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த படிமத்திற்கு Sahelanthropus tchadensis என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படிமமானது டார்வினை பின்பற்றுபவர்களை பொருத்தவரையில் கிளி கூன்டிற்குள் பூனையை விட்ட கதையாகிவிட்டது. உலக புகழ்பெற்ற நேச்சர் என்ற சஞ்சிகை இவ்வாறு கூறுகிறது:

சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு!


சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு!
சுமார் ஐந்தரை ஆண்டுகள் அமைதியின் சொரூபம். பின்னர் ஐந்தரை ஆண்டுகள் ஆக்ரோஷத் தாண்டவம். பொதுவில் சூரியனில் இதுதான் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இப்போது சூரியன் ஆக்ரோஷத்தைக் காட்டவேண்டிய காலம். ஆனால், அமைதியாக இருக்கிறது. இது ஏன் என்பதுதான் விளங்கவில்லை. விஞ்ஞானிகள் திகைத்து நிற்கின்றனர்.
கண்ணைக் கூச வைக்கிற அளவுக்கு மிகப் பிரகாசமான ஒளித்தட்டாக சூரியன் காட்சி அளிக்கிறது. ஆனாலும், சூரியனின் மேற்புறத்தில் அவ்வப்போது கரும்புள்ளிகள் தென்படுகின்றன. இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட விஷயம். இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ 1612-ம் ஆண்டில் தமது சிறிய தொலைநோக்கி மூலம் சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்து வரைபடமே தயாரித்தார். கட்டுரைகளையும் எழுதினார். கிட்டத்தட்ட அப்போதிலிருந்தே சூரியனின் ஒளித்தட்டு தொடர்ந்து ஆராயப்பட்டு வந்துள்ளது.
சூரியனில் கரும்புள்ளிகள் நிரந்தரமாக இருப்பது கிடையாது. ஒருசமயம் கரும்புள்ளிகளே இராது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒருகட்டத்தில் அது உச்சத்தை எட்டும். பின்னர் அதேபோல மறைய ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் கரும்புள்ளிகளே இராது. பிறகு மறுபடி அவை தோன்ற ஆரம்பிக்கும். இதற்கெல்லாம் ஒரு காலக்கணக்கு உள்ளது.
அதாவது கரும்புள்ளிகள் தெரிய ஆரம்பித்து உச்சத்தை எட்டுவதற்கு சுமார் ஐந்தரை ஆண்டுகள் ஆகும். பிறகு அவை படிப்படியாகக் குறைந்து புள்ளிகள் மறைவதற்கு அதேபோல ஐந்தரை ஆண்டுகள் பிடிக்கும். ஆக மொத்தம், 11 ஆண்டுகள் ஆகும். இது 11 ஆண்டு கரும்புள்ளிக் காலச்சுழற்சி என்று குறிப்பிடப்படுகிறது.

விண்வெளிப் போர் (Space War)


விண்வெளிப் போர் (Space War)

விண்தூக்கிகள் (space elevators)
தங்கத்தை எப்படி நாம் அடையாளம் காண்கிறோம்? அதன் நிறத்தில், அதன் எடை மற்றும் அழியாத்தன்மையை வைத்தல்லவா?
இதை விஞ்ஞானியொருவரின் கண்கள் வேறொரு விதமாகப் பார்க்கும். அதாவது, தங்கத்தில் உள்ள அணுக்களின் அமைப்பு அதைத் தங்கமாக்குகிறது, அமைப்பு மாறினால் அது வேறோர் உலோகமாக மாறிவிடும்.
ஆக, நம்மால் அணுக்களைக் கட்டுப்படுத்த முடிந்தால், நிச்சயம் அதனால் ஆன பொருட்களின் அத்தனை தன்மையையும் மாற்ற முடியும்.
அப்படி மாற்றும் சக்தி படைத்ததுதான் 'நானோ டெக்னாலஜி' விஞ்ஞானம். இதை வைத்துத்தான்விண்கயிற்றின் தன்மையை ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாகவும், நூறு மடங்கு எடை குறைவானதாகவும் மாற்றி அமைத்திருகிறார்கள் விஞ்ஞானிகள்.

விஞ்ஞானம் போதித்த மெஞ்ஞான வேதம்



இரு கடல்களின் நீரும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை
வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள்,மனிதனின் தோலில் தான் உள்ளன, என்பது மிகச் சமீபத்;திய விஞ்ஞானக் கண்டு பிடிப்பு. ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்த விஞ்ஞான உண்மையைக் குர்ஆன் கூறுகிறது. நமது வசனங்களை மறுப்போரை நரகில் நுழையச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம், அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை மாற்றுவோம். (4:56)

முதல் நிலவுப் பயணத்தில் மறைக்கப்பட்டது என்ன?!


 
நிலவில் இறங்கிய விண்வெளி வீரர்கள்நிலவுக்கு செல்லும் முன் தாங்கள் உயிருடன் திரும்புவது சந்தேகம் என்ற நிலையிலேயே பயணத்தை தொடங்கினர்இதற்காக தங்கள் உயிருக்கு இன்சூரன்ஸ் செய்ய முயன்றபோது எந்த நிறுவனமும் அதற்கு பொறுப்பு ஏற்கவில்லை.
கிரேய்க் நீல்சன் என்பவர் விண்வெளி பற்றி 'ராக்கெட் மேன்என்ற தலைப்பில் புத்தகம் எழுதி வெளியிட்டு உள்ளார்அந்த புத்தகத்தில் மனிதனின் நிலவுப் பயணத்தில் மறைக்கப்பட்ட சில விஷயங்களையும்மறக்க முடியாத சம்பவமாக விண்வெளி வீரர்கள் கூறியதையும் தொகுத்துக் கூறி உள்ளார்.

பிரபஞ்சத்தின் அற்புதங்கள்


பிரபஞ்சத்தில் நீண்டு கொண்டு செல்லும் அற்புதங்களின் பட்டியல்
பிரபஞ்சத்தில் நீண்டு கொண்டு செல்லும் அற்புதங்களின் பட்டியல் மனித குலத்தை அச்சுறுத்தும் விண்கற்களால் ஆபத்து நேருமா?
பெளதிகம், இரசாயனம், கணிதம், தொழில் நுட்பம், இலத்திரனியல் போன்ற பல்வேறுபட்ட விஞ்ஞானத்துறைகளுள் மிகவும் பழைமை வாய்ந்தது வானசாஸ்திரம். எமது அயல் நாடான பாரதத்தில் கூட வான சாஸ்திரம் அக்காலகட்டத்திலேயே கொடிகட்டிப் பறந்தது என்று வரலாறு இயம்புகின்றது.

உடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்


ளரவமற்ற அரையிருட்டுச் சந்து. நீங்கள் தனியே நடந்து போய்க் கொண்டிருக்கிறீர் கள். திடீரென ஒரு காலடியோசை உங்களைப் பின்தொடர்கிறது. திரும்பிப் பார்த்தால், முக மூடியணிந்த ஒரு மனிதன் உங்களை நோக்கி வேக வேகமாக வந்து கொண்டிருக்கிறான். தலைதெறிக்க ஓட ஆரம்பிக்கிறீர்கள். உங்களால் அப்படி ஓட முடியும் என்று அதற்கு முன் உங்களுக்கே தெரியாது.
உங்களுக்குள் பய எச்சரிக்கை மணியை அடித்து, ஓடத் தூண்டியது எது? அதுதான் `அட்ரினல்’ சுரப்பி!
சிறுநீரகங்களின் மேல் கொழுப்பு அடுக்குக் குள் பதுங்கிக் கிடக்கிறது, ஒரு ஜோடி அட்ரினல் சுரப்பி. இந்த முக்கோண வடிவ, ஆரஞ்சு நிறச் சுரப்பிகள் `அட்ரினல்’ (லத்தீன் மொழியில் `அட்’ என்றால் `அருகில்’, `ரீன்ஸ்’ என்றால் சிறுநீரகம்.) அல்லது `சுப்ரா ரீனல்’ (`சுப்ரா’ என்றால் `மேலே’) சுரப்பிகள் எனப்படுகின்றன. நெருக்கடியின்போது இவை சில ஹார்மோன்களை வெளியிடுகின்றன.
பயத்தில் தலைதெறிக்க ஓடுவது, குத்துச்சண்டை வீரரின் `நாக்-அவுட்’ குத்தில் கூடுதல் வேகம், நெருக்கடியான நிலையில் டென்னிஸ் வீரர் `எக்ஸ்ட்ரா’ சக்தியோடு பந்தை அடிப்பது எல்லாமே அட்ரினல் சுரப்பிகளின் கைங்கரியம்தான்.
***

உங்களுக்குத் தெரியுமா?

உடலை ஆரோக்யமாக வைத்திருக்க சில வழிமுறைகள்


உடலை வளமாக வைத்திருக்க வேண்டும் எனும் ஆர்வம் எல்லோரிடமும் காணப்படுவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் இந்த பத்து வழிமுறைகளை கடைபிடிப்பது பயனளிக்கும்.

கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை…


இது உண்மைதான்; நம்புங்கள்.
ஆம்! கேன்சர் என்னும் புற்றுநோய் அரக்கனுக்கு மருந்தாகிறது எலுமிச்சை.
உலகம் முழுவதும் கேன்சருக்கு பலியாவோர் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல. இந்த கொடிய வியாதியை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதுள்ள மருத்துவ முறைகளில் ஆரம்ப கட்டத்தில் நோயை கண்டுபிடித்துவிட்டால் மட்டுமே குணப்படுத்த முடியும். மற்றபடி நோய் பாதிப்பை தடுத்து வாழ்நாளை அதிகரிக்க மட்டுமே முடியும் என்ற நிலை உள்ளது.
உலக மருத்துவ விஞ்ஞானிகள் புற்று நோயை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த செய்தியின் துவக்கத்தில் சொல்லப்பட்ட தகவல்.

இதயம் துடிப்பதற்கு உதவும் இயற்கை “பேஸ் மேக்கர்!’


இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. இரண்டு மேலறைகள்; இரண்டு கீழறைகள். வலது மேலறைக்கு வரும் அசுத்த ரத்தம், “டிரைகைடு’ என்ற மூவிதழ் வால்வு திறந்ததும், வலது கீழறைக்கு வருகிறது. வலது கீழறையிலிருந்து பல்மனி தமனி வழியாக, நுரையீரலுக்குச் சென்று சுத்தம் செய்யப்பட்டு, இடது மேலறைக்கு வருகிறது. “மைட்ரல்’ என்ற ஈரிதழ் வால்வு வழியாக, இடது கீழறை வந்து, மகாதமனி வழியாக, உடல் உறுப்புகளுக்கு, சுத்த ரத்தமாக எடுத்து செல்லப்படுகிறது. இப்படி ஒவ்வொரு துடிப்பு மூலம், 70 சிசி ரத்தம், இதயத்திலிருந்து மகா தமனிக்கு சென்று, உடல் உறுப்புகளுக்கு செல்கிறது. ஒரு நிமிடத்திற்கு, 5 லிட்டர் ரத்தம் வெளியேற்றப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு, இதயம், 72 தடவை துடிக்கிறது.

செயற்கை “பேஸ் மேக்கர்’ இயங்குவது எப்படி?


பேஸ் மேக்கர் பணி இயற்கையாக நடைபெறவில்லை எனில், செயற்கை பேஸ் பேக்கர் பொருத்த வேண்டியுள்ளது. இது ஒரு ரூபாய் அளவுள்ள மருத்துவக் கருவி. குறைந்த இதயத் துடிப்பை அதிகமாக்க, உடலில் பொருத்தப்படும் கருவி. இந்த கருவியில், கீழ்கண்ட பகுதிகள் உள்ளன. பேட்டரி உள்ளது. இது, லித்தியம் சக்தி கொடுக்கிறது. இதில் உள்ள சிறிய கம்ப்யூட்டர், இதயத் துடிப்பு மிகவும் குறைவாக உள்ளதா, அதிகமாக உள்ளதா என்று அறிய உதவும். அதன் தகவலை பேட்டரிக்கு அனுப்பும். துடிப்பு சாதாரணமாக இருந்தால், பேஸ் மேக்கர் எவ்வித மின்சாரத்தையும் கொடுக்காது.
இதயத் துடிப்பு குறைந்தால் கம்ப்யூட்டர், பேட்டரிக்கு தகவல் கொடுத்து, பேட்டரி, மின்சாரத்தைச் செலுத்தி, இதயத்தைத் துடிக்கச் செய்கிறது. பேட்டரியிலிருந்து மின்சாரம், “லீட்ஸ்’ என்ற மெல்லிய கம்பிகள் மூலம், இதயத்தின் வலது கீழறைக்குச் செலுத்தப்படுகிறது. பேஸ் மேக்கர், மார்பின் மேல் பகுதியான காலர் எலும்புக்குக் கீழ் பொருத்தப்படுகிறது.
அதன் அருகிலுள்ள தமனியின் மூலம், இதயத்தின் வலது கீழறையின் கீழ்ப்பகுதி வரை, “லீட்ஸ்’ செலுத்தப்பட்டு, அப்படியே வைக்கப்படும். பேஸ் மேக்கரில் இரண்டு, “லீட்ஸ்’ கொண்ட கருவியும் உண்டு. ஒரு, “லீட்,’ வலது மேலறையில் இருக்கும்; இன்னொரு “லீட்’ வலது கீழறையின் கீழ்ப்பகுதியில் வைக்கப்படுகிறது.

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு


கோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகம். கோடிக் கணக்கான லிட்டர் கோலா பானங்கள் ஆண்டுதோறும் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்கள் இன்றி, உயிர் வாழ முடியாது என்றே கூட பலர் நினைக்கின்றனர். கோககோலா, பெப்சி, லிம்கா போன்றவை, பட்டி தொட்டிகளில் கூட கிடைக்கின்றன. சூப்பர் மார்க்கெட்டுகளில், கோலா பானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பருக, சினிமா நட்சத்திரங்களும் ஊக்குவிக் கின்றனர். கோலா பானங்களில் உள்ள ஆபத்தை உணராமல், கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளோர் கூட, இவற்றை பருகுகின்றனர்.
இந்த பானங்களில் அப்படி என்ன உள்ளது? என்ன ஆபத்து?
பாஸ்பாரிக் அமிலம், சர்க்கரை, காபீன், நிறமி மற்றும் வாசனை ஊட்டி ஆகியவை இதில் உள்ளன. துருவை கரைத்தல், ஆணியை கரைத்தல், சுண்ணாம்பை கரைத்தல் ஆகிய பணிகளைத் திறம்பட செய்யும், பாஸ்பாரிக் அமிலம், இதில், 55 சதவீதம் உள்ளது. இதனால், கோலாவில் அமிலத்தன்மை, 2.6 பி.எச்., அளவு எகிறுகிறது. உணவை பதப்படுத்த பயன்படும் வினிகரும், இதே அளவு அமிலத்தன்மை கொண்டது. கோலாவில் சர்க்கரையும், வாசனை ஊட்டியும் சேர்க்கப் படுவதால், வினிகரை விட சுவையாக உள்ளது.

தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்


கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது.  இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.
* பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.
* ஆண்கள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசக் கூடாது. முடி வளருவது அங்கங்கு தடைப்படும்.
* கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

சிறுநீர்ப்பை அழற்சி என்றால் என்ன?


சிறுநீர் பையில் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் எரிச்சல் அல்லது வீக்கத்தால், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுகிறது.
இதனால், அவசரமாக மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கவும், அத்தகைய சமயங்களில் வலி அல்லது குத்தல், ஆண் அல்லது பெண் இனப்பெருக்க உறுப்பில் அசவுகரியம், ஒரு சிலருக்கு சிறுநீருடன் ரத்தமும் வெளியேறும். பொதுவாக, பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் அழற்சி ஏற்பட காரணம், குறுகிய அளவிலான சிறுநீர்ப்பை நாளம் கொண்டிருப்பது அல்லது தொற்று ஏற்படுவது தான். பெரும்பாலான பெண்கள், வாழ்க்கையில் ஒருமுறையேனும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான சிகிச்சை அளிக்காவிடில், சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். சிறுநீர்ப்பை அழற்சிக்கான சிகிச்சை முறை: சிறிய அளவிலான சிறுநீர்ப்பை அழற்சிக்கு, வலி நிவாரணி மற்றும் போதிய அளவிற்கு நீர் அருந்துவதன் மூலம், 4 முதல் 9 நாட்களில் சரியாகிவிடும். மிதமான நிலையிலுள்ள சிறுநீர்ப்பை அழற்சிக்கு, தேவையான சிகிச்சையுடன் 7 நாட்களுக்கு மருந்து உட்கொள்ள கொள்ள வேண்டும். சில சமயம், இது அடிக்கடி நிகழ்ந்தால், எந்த வகை பாக்டீரியாவால் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து, அதற்கேற்றவாறு மருந்து உட்கொள்ள வேண்டும். நிறைய நீர் அருந்துதல், பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் குறித்த காலங்களில் சிறுநீர் கழித்தல் ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம், சிறுநீர்ப்பை அழற்சி ஏற்படுவதை குறைக்கலாம்.

காப்சிகம் பேபிகார்ன் நூடுல்ஸ்


நூடுல்ஸ் என்றாலே தனிச்சுவை தான். காப்ஸிகம் பேபிகார்ன் நூடுல்ஸ் ஒரு வித்தியாசமான சுவையுடன் மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது.
தேவையானவை
சைனீஸ் நூடுல்ஸ் – 2 பாக்கெட்
காரட், காப்சிகம், பேபிகார்ன் – 2 கப் (நீள வாக்கில் நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
அஜினமோட்டா – 1/4 டீஸ்பூன்
வெள்ளை மிளகு பவுடர் – 1/4 டீஸ்பூன்
சோள மாவு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
* சைனீஸ் நூடுல்ஸை சிறிது உப்பு சேர்த்து உதிரியாக வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
* வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வதக்கவும்.
* அத்துடன் காய்கறி கலவையை சேர்த்து, இஞ்சி பூண்டு விழுது, மிளகு பவுடர், சோள மாவு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
* வதங்கியதும் அஜினாமோட்டா, சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறவும். அத்துடன் வேக வைத்த நூடுல்சை சேர்த்து கிளறி சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு
* கடையில் விற்கும் ரெடிமேட் மசாலா நூடுல்ஸ் பாக்கெட் என்றால் நறுக்கிய காய்கறி, வெங்காயம், பச்சை மிளகாயுடன், மசாலா பவுடரை சேர்த்து நெய் விட்டு வதக்கி, வதங்கியதும் வேக வைத்த நூடுல்ஸை சேர்த்துக் கிளறவும். இதற்கு அஜினமோட்டோ சேர்க்கத் தேவையில்லை.

குழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்.


குழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்.
இந்த அவசர உலகில் எத்தனை அவசரமான வேலைகள் இருந்தாலும் குழந்தைக்கென நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டியது முக்கியம்.

குழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம். அதன் எண்ணற்ற விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள்.

கருவிலேயே தொடங்குகிறது இதன் கதை. கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் - நியூரோன்கள் - உருவாகின்றன. என்ன வேகத்தில்? நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில்!

கோடிக் கணக்கில் நியூரோன்கள் தோன்றி கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன. இவையெல்லாம் மிகக் கவனமாக ஏற்படுத்தப் பட்டவை.

தமிழ் மின் அகராதி மென்பொருள் இலவசமாக..



இது கூக்ளியில் வந்திருக்கும் இலவச போர்ட்டபிள் மென்பொருள்.

இதன் மூலம் மொழிமாற்றம் மட்டுமின்றி அர்த்தம் காணலாம்.

இதனை பயன்படுத்த இணைய இணைப்பு அவசியம்.

இதனை நாம் டாஸ்க் பாரில் வைத்துக் கொள்ளலாம்.

8 Dec 2011

EFFECTS OF COLD WATER

Please be a true friend and send this article to all your friends you care about. 


For those who like to drink cold 
water, this article is applicable to you.
It is nice to have a cup of cold drink after a meal. However, the cold water will solidify the oily stuff that you have just consumed.
It will slow down the digestion. Once this 'sludge' reacts with the acid, it will break down and be absorbed by the intestine faster than the solid food. It will line the intestine. Very soon, this will turn into fats and lead to cancer. It is best to drink hot soup or warm water after a meal. 

A serious note about heart attacks - You should know that not every heart attack symptom is going to be the left a rm hurting. Be aware of intense pain in the jaw line.
You may never have the first chest pain during the course of a heart attack. Nausea and intense sweating are also common symptoms. 60% of people w ho have a heart attack while they are asleep do not wake up. Pain in the jaw can wake you from a sound sleep. Let's be careful and be aware. The more we know the better chance we could survive. 

A cardiologist says if everyone who reads this message sends it to 10 people, you can be sure that we'll save at least one life. Read this & Send the link to a friend. It could save a life. So, please be a true friend and send this article to all your friends you care about.

M. Shamsudeen

ஜிகாபைட்டின் டி1132என் புக்டாப்


Gigabyte Booktop T1132N
மேசைக் கணினியாக இருந்தாலும் சரி, லேப்டாப்பாக இருந்தாலும் சரி அவற்றுக்கென்று தனித்துவமும் தன சிறப்பம்சங்களும் உள்ளன. மேசைக் கணினியில் இணைப்பு வசதி பக்கவாக இருக்கும். லேப்டாப் மிக எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வசதியைக் கொண்டிருக்கும்.
தற்போது இவற்றை விஞ்சும் வகையில் டேப்லெட் என்று கூறப்படும் கையடக்க கணினிகளும் மார்க்கெட்டிற்கு வருகின்றன. அவற்றின் செயல் திறனும் சூப்பராக இருக்கிறது.

ஜிகாபைட் கம்யூட்டர்ஸ் நிறுவனம் புதிய டிவைஸை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த டிவைஸ் கணினி, லேப்டாப் மற்றும் டேப்லெட்டுகளில் உள்ள வசதிகளை ஒருங்கே  கொண்டிருக்கும் சாதனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புக்டாப் டி-1132என் என்று அழைக்கப்படுகின்ற இந்த புதிய மினி லேப்டாப் ஒரு புதிய படைப்பாக வருகிறது. இந்த புக்டாப் 4 மாடல்களில் வருகிறது.
ஜிகாபைட்டின் டி1132என் புக்டாப் ஒரு உறுதியான சேஸிஸ் கொண்டுள்ளது. இந்த புக்டாப் கருப்பு மற்றும் வெள்ளை என 2 நிறங்களில் வருகிறது. இதன் மொத்த பரப்பு  290 மிமீ x 220.7 மிமீ x 27.86 மிமீ ஆகும். இதன் எடை 1.7 கிலோவாகும். இது பார்ப்பதற்கும் மிகவும் அழகாக இருக்கிறது. இதில் 90 சதவீதம் அளவிற்கு கீபோர்டும் மற்றும் 10 சதவீதம் அளவிற்கு டிராக் போர்டும் உள்ளது.

இந்த புக்டாப் 2ஜி இன்டல் ஐ5-2467 எம் பிராசஸரைக் கொண்டிருக்கிறது. இந்த பிராசஸரின் கடிகார வேகம் 1.66ஜி ஹெர்ட்ஸ். இதன் பூஸ்டிங் 2.3ஜி ஹெர்ட்ஸ் ஆகும். இதன் திரை கெப்பாசிட்டிவ் எல்இடி பேக்லிட் மற்றும் மல்டி டச் வசதி கொண்டது.

இதில் டிடிஆரின் 2ஜிபி ரேம் அல்லது 4ஜிபி ரேமை பொருத்திக் கொள்ளலாம். இந்த புக்டாப்பின் மொத்த சேமிப்பு வசதி 8ஜிபி ஆகும்.  இது இன்டல் எச்எம்65 எக்ஸ்பிரஸ் சிப்செட்டைக் கொண்டுள்ளது.

இந்த புக்டாப்பில் 3 ஹார்டு டிஸ்க் வசதி உள்ளது. வாடிக்கையாளர் தங்களது தேவைக்கேற்ப 320ஜிபி, 500ஜிபி மற்றும் 750ஜிபி ஆகிய சேமிப்பு திறன் கொண்ட மாடல்களில் ஒன்றை தேர்ந்து கொள்ளலாம். மேலும் இதில் இன்டல் எச்டி கிராபிக்ஸ் 3000 பிராசஸரும் உள்ளது.

என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடி 520எம் கிராபிக்ஸ் கார்டும் உள்ளது. இந்த கிராபிக்ஸ் கார்டு என்விடியா ஆப்டிமஸ் தொழில் நுட்பத்தை சப்போர்ட் செய்யும். இதன் கிராபிக்ஸ் மெமரி 1ஜிபி ஆகும்.

இந்த புக்டாப் இன்டக்ரேட்டட் ஸ்பீக்கர்களுடன் 2 ஊஃபர்களையும் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 1.3 மெகா பிக்ஸல் வெப் கேமரா மூலம் வீடியோ கால் செய்வது மிக எளிதாக இருக்கும்.

யுஎஸ்பி போர்ட் 2.0 மற்றும் 3.0 மற்றும் எச்டிஎம்ஐ அவுட்போர்ட் ஆகியவையும் இந்த புக்டாப்பை அலங்கரிக்கின்றன. இந்த புக்டாப் 6 செல் லித்தியம்-ஐயன் பேட்டரியைக் கொண்டிருப்பதால் இதன் மின் திறனும் மிக பக்காவாக இருக்கும்.

ஜிகாபைட் டி1132என் புக்டாப்பின் விலை அறிவிக்கப்படவில்லை. ஆனால் இதன் விலை அதிகமாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


-- 
Regards,

Zainul Hussain
Kuwait Oil Company

மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

----------------
தமிழினம் மீதான இலங்கை இராணுவத்தின் போர்க்கொடுமைகளை வெளிக்கொண்டு வந்த பிரபல ஊடகமான சேனல் 4, தன்னுடைய ஆவணப்படம் ஒன்றிற்கு வைத்த தலைப்பு தான் நீங்கள் மேலே காணுவது.
---------------

                     1904-ஆம் ஆண்டு. உலகின் மிகப்பெரிய கண்காட்சி ஒன்றிற்கு தயாராகிக் கொண்டிருந்தது அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரம். இன்றைய காலக்கட்டத்தில் உலகில் நடக்கும் நிகழ்வுகளை தொலைக்காட்சி, இன்டர்நெட் வாயிலாக நாம் கண்டுவிடுகின்றோம். ஆனால் அந்த காலக்கட்டத்தில் இதற்கெல்லாம் வாய்ப்பில்லாத போது, இம்மாதிரியான கண்காட்சிகள் தான் உலக நடப்புகளை அறிந்துக்கொள்ளும் இடங்களாக அமைந்தன. 

உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் பொருட்கள், புதிய கண்டுபிடிப்புகள், விலங்குகள், விவசாய யுக்திகள் என்று அனைத்தையும் ஒருசேர கண்டுகளிக்கும் இடங்களான திகழ்ந்தன இந்த கண்காட்சிகள். இதுப் போன்ற ஒரு பிரமாண்டமான கண்காட்சிக்கு தான் தயாராகிக் கொண்டிருந்தது செயின்ட் லூயிஸ் நகரம். 

அதெல்லாம் சரி.........விலங்குகளை, கண்டுபிடிப்புகளை, யுக்திகளை காட்சிக்கு வைக்கின்றார்கள்...ஓகே....

மனிதர்களை காட்சிக்கு வைத்தால்????? 

வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்ற பரிணாமக் கருத்தை நிரூபிக்க உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வெவ்வேறு இனத்தவரை அழைத்து வந்து காட்சிக்கு வைத்து, தாங்களே சிறந்தவர்கள் என்று நிரூபிக்க முற்பட்டால்??

ஆம். கேட்கவே கொடூரமாக இருக்கும் இதுப்போன்ற செயல்களை தான் அரங்கேற்றி காட்டியது அந்த கண்காட்சி. ஐரோப்பாவின் பெரிய நகரங்களில் இதுப்போன்ற கண்காட்சிகள் ஏற்கனவே நடைப்பெற்றிருக்கின்றன என்றாலும்,  பரிணாமரீதியாக தாழ்ந்தவர்கள் என கருதப்படும் மனித இனத்தவரை அதிகமாக காட்சிக்கு வைத்தது இந்த கண்காட்சியில் தான்.  

மனிதனின் உடல், உள்ளம் மற்றும் கலாச்சாரம் குறித்த வரலாற்றை ஆய்வு செய்யும் துறைக்கு மானிடவியல் (Anthropology) என்று பெயர். இந்த துறையைச் சார்ந்தவர்களை மானிடவியலாளர் என்பார்கள். 

செயின்ட் லூயிஸ் கண்காட்சியின் மானிடவியல் துறையின் தலைவராக இருந்தவர் ஜான் மெக்கீ (John Mcgee) என்ற பிரபல மானிடவியலாளர். இவர் அமெரிக்க மானிடவியல் சங்கத்திற்கும் அப்போது தலைவராக இருந்தார். 

இவர் தான் நாம் மேலே பார்த்த கொடுமைகளுக்கு பின்னணியில் செயல்பட்டவர். வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்ற டார்வினின் கருத்தை இந்த கண்காட்சி வாயிலாக நிரூபித்துவிட வேண்டும் என்பதே இந்த விஞ்ஞானியின் நோக்கம். அதற்கு அவர் செய்த ஏற்பாடு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பரிணாமரீதியாக தாழ்ந்தவர்கள் என கருதப்படும் இனத்தவரை இந்த கண்காட்சிக்கு அழைத்துவருவது, அவர்களது நடவடிக்கைகளை செயல்முறையாக காட்டி, வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்ற டார்வீனிய கோட்பாட்டை நிரூபிப்பது. 

தன்னுடைய இந்த எண்ணத்தை நிறைவேற்ற செயல்முறையில் இறங்கினார் மெக்கீ. தென் அமெரிக்க பழங்குடியினத்தவர், வட அமெரிக்காவின் பூர்வகுடிமக்கள், எஸ்கிமோக்கள் என்று பல இனத்தவர் இவருடைய லிஸ்ட்டில் இருந்தார்கள். அவர்களை அழைத்துவர குழுக்களை அனுப்பினார் மெக்கீ. 

நீங்கள் மேலே பார்த்த இனத்தவரையெல்லாம் விட, மெக்கீ ஆர்வமுடன் எதிர்பார்த்த ஒரு இனம், மத்திய ஆப்பிரிக்காவின் பிக்மீக்கள் (Pygmy).

பிக்மீக்கள் - இவர்கள் சராசரி மனிதர்களை விட உயரம் குறைந்தவர்கள். சுருட்டலான முடியும், மிக கருமையான நிறமும் கொண்டவர்கள். மத்திய ஆப்பிரிக்க காடுகளில் வசிக்கும் பழங்குடியினத்தவர்.  

இவர்களை கண்காட்சியில் வைக்க ஏன் அவ்வளவு ஆர்வப்பட்டார் மெக்கீ என்பதை இந்நேரம் புரிந்துக்கொண்டிருப்பீர்கள். பிக்மீக்களை கொண்டு வரும் பொறுப்பை, பயண ஆராய்ச்சிகளில் (Explorer) சிறந்தவராக கருதப்பட்ட சாமுவேல் வெர்னெரிடம் (Samuel Verner) ஒப்படைத்தார் மெக்கீ. 

மத்திய ஆப்பிரிக்கா நோக்கிய தன்னுடைய கடல்வழி பயணத்தை தொடங்கினார் வெர்னெர்.

--------------------------

ஓடா பெங்கா:

அதே காலக்கட்டம். மத்திய ஆப்பிரிக்காவின் காங்கோ நாடு.  

அப்போது பெல்ஜியம் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது காங்கோ. இந்நாட்டின் காங்கோ ஆற்றையொட்டிய காட்டுப்பகுதிகளில் அதிகளவில் வசித்து வந்தனர் பிக்மீக்கள். திடீரென இவர்கள் மீது படையெடுத்தனர் பெல்ஜியம் மன்னரின் படைகள். இதற்கு காரணம், பிக்மீக்கள் இருந்த பகுதியில் உள்ள ரப்பர் மரங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவர பெல்ஜியம் மன்னர் எண்ணியதே ஆகும்.

பிக்மீக்கள் துடைத்தெரியப்பட்டனர். 

வேட்டைக்கு சென்று விட்டு தன் இருப்பிடத்துக்கு திரும்பிய ஓடா பெங்கா (Ota Benga) என்ற பெயருடைய பிக்மீக்கு மிகுந்த அதிர்ச்சி. தன்னுடைய மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் இந்த அசம்பாவிதத்தில் இழந்திருந்தார் பெங்கா. தன்னுடைய இனம் துடைத்தெரியப்பட்டிருப்பதை முழுவதுமாக அறிந்துக் கொள்வதற்குள் மற்றொரு பழங்குடியினத்தவரிடம் சிக்கிக்கொண்டார். 

அவர்கள் பென்காவை கூண்டில் அடைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகினர். 

---------------------------

பிக்மீக்களை தேடி காங்கோ ஆற்றில் வந்துக்கொண்டிருந்தார் வெர்னெர். ஆற்றின் ஒரு பகுதியில் வெர்னெரின் நீராவிப் படகு பழுதடைந்தது. உதிரிப்பாகங்கள் வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு மேலாகுமென சொல்லப்பட, அந்த இடத்திலிருந்து இறங்கி ஆற்றையொட்டிய காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தார் வெர்னெர். 

ஆஹா...அவர் எதிர்ப்பார்த்து வந்த விசயம் கிடைத்துவிட்டது. ஆம், கூண்டில் அடைக்கப்படிருந்த பெங்காவை பார்த்தார் வெர்னெர். பரவசமடைந்தார்.

பெங்காவை கூண்டில் அடைத்தவர்களிடம் பேசி, பணய பொருட்களை கொடுத்து பெங்காவை விடுதலை செய்தார். பிக்மீக்கள் குறித்து நன்கு அறிந்தவர் என்பதால், அவர்களுடைய மொழியையும் அறிந்திருந்தார் வெர்னெர். தன்னுடன் வரவேண்டுமென்று பெங்காவிடம் அவர் சொல்ல, இங்கே இந்த பழங்குடியினருடன் இருந்து வேதனைகளை அனுபவிப்பதைவிட வெர்னருடன் செல்வது சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார் ஓடா பெங்கா. 

தன்னுடைய இந்த முடிவு, உலகின் கோரமான ஒரு நிகழ்வுக்கு காரணமாக இருக்கப்போகின்றது என்பதை அறிந்திருக்கவில்லை அந்த அப்பாவி. 

பின்பு, வேறு இடங்களில் இருந்த சில பிக்மீக்களை பெங்காவின் உதவிக்கொண்டு சம்மதிக்க வைத்து அவர்களை அழைத்துக்கொண்டு அமெரிக்காவிற்கு பயணத்தை தொடங்கினார் வெர்னெர். 

செயின்ட் லூயிஸ் உலக கண்காட்சி:
வெர்னரின் நீராவிப் படகு பிக்மீக்களுக்கு முதல் ஆச்சர்யத்தை தந்தது. நீராவிப் படகு எப்படி வேலை செய்கின்றது என்று அவர்களுக்கு விளக்கினார் வெர்னெர். அமெரிக்காவை அடைந்தவுடன், உயர உயரமான கட்டிடங்களும் தொழில்நுட்ப விசயங்களும் பிக்மீக்களை ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு சென்றன. 

தான் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், அமெரிக்காவை அடைந்தவுடன், பிக்மீக்களை ரயிலில் ஏற்றி செயின்ட் லூயிஸ் நகருக்கு அனுப்பிவைத்து விட்டார் வெர்னெர்.

கண்காட்சியில் இவர்கள் காட்சிக்காக வைக்கப்பட, மானிடவியல் ஆய்வாளரான மெக்கீ, தன்னுடைய எண்ணம் நிறைவேறியதை எண்ணி ஆனந்தப்பட்டார். கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர் பிக்மீக்கள். அதிலும் குறிப்பாக ஓடா பெங்காவின் மீது பலரின் பார்வையும் விழுந்தது. அதற்கு காரணம் அவரது பற்கள் தான். தன்னுடைய கலாச்சாரத்தின்படி சிறு வயதிலேயே தன்னுடைய பற்களை கூர்திட்டி இருந்தார் பெங்கா. 

கண்காட்சியின் நாட்கள் செல்ல செல்ல, வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்று இவர்களை காட்டி தன்னுடைய பரிணாம எண்ணங்களை மக்களுக்குள் வலுவாக விதைத்தார் மெக்கீ. அறிவியல்ரீதியாக வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்பதை நிரூபித்துவிட்டதாக மகிழ்ந்துக்கொண்டார். 

ஏழு மாத காலம் நடந்த இந்த கண்காட்சியை, சுமார் இரண்டு கோடி மக்கள் வரை பார்த்ததாக குறிப்பிடும் சேனல் 4, அவர்களில் பெரும்பாலானவர்கள், வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்பதை அறிவியல்ரீதியாக இந்த கண்காட்சி நிரூபித்து காட்டிவிட்டதாக எண்ணினர் என்றும் கூறுகின்றது.

பிக்மீக்கள் அறிவில் குறைந்தவர்கள் என்ற வாதம் முட்டாள்தனமானது. ஏனென்றால், அவர்கள் இருந்த சூழ்நிலைகேற்ப அறிவில் சிறந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர். இவர்களுடன் அதிக காலம் கழித்த வெர்னெர், இவர்கள் மனிதர்களை காட்டிலும் எவ்விதத்திலும் தாழ்ந்தவர்களில்லை என்று தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 

கண்காட்சியில் இவர்களின் சில நடவடிக்கைகளை விரும்பவில்லை மெக்கீ. ஏனென்றால் அவை புத்திசாலித்தனமாக, வெள்ளையர்களின் நடவடிக்கைகளுக்கு நிகராக இருந்தது. ஆக, பிக்மீக்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம், அறிவியல் அடிப்படையில் இனவெறியை நியாயப்படுத்த திட்டமிடப்பட்ட சதியே அன்றி வேறேதும் இல்லை.      

மலேரியாவில் இருந்து விடுபட்டு செயின்ட் லூயிஸ் நகருக்கு வந்த வெர்னெர், தான் அழைத்து வந்த பிக்மீக்கள் சிறைவாசிகள் போல நடத்தப்படுவதை உணர்ந்துக்கொண்டார். 

கண்காட்சி முடிந்தது. தன்னுடைய வாக்குறுதிக்கேற்ப பிக்மீக்களை மறுபடியும் ஆப்பிரிக்காவில் சென்று விட்டு விட்டார் வெர்னெர். 

தன்னுடைய இனம் அரசப்படையால் முழுவதுமாக அழிக்கப்பட்டிருப்பதை கண்டார் ஓடா பெங்கா. பிறகு, வேறொரு இனத்திலிருந்து ஒரு பெண்ணை மணமுடித்து கொண்டார். அந்த பெண் பாம்பு கடித்து இறக்க, பெங்கா மீது பேய் இருப்பதாக கூறி அவரை நிராகரித்தனர் அந்த இனத்தினர். தன்னை அனைவரும் ஒதுக்குகின்றனர் என்று வேதனை அடைந்த பெங்கா, தன்னை மறுபடியும் அமெரிக்காவிற்கு அழைத்து செல்ல சொல்லி வெர்னரிடம் கேட்டுக்கொண்டார். 

முதலில் மறுத்த வெர்னர், பின்னர் ஒப்புக்கொண்டார். மறுபடியும் அமெரிக்காவிற்கு பயணமாகினர். இந்த முறை அமெரிக்காவின் நியூயார்க். 

தான் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வந்திருந்த கைவினை பொருட்களை நியூயார்க் அருங்காட்சியகத்தில் விற்க முயன்றார் வெர்னெர். ஆனால், அவருடைய பொருட்களை வாங்க மறுத்துவிட்டது அருங்காட்சியகம். இதனால் விரக்தியடைந்த வெர்னெர், ஓடா பெங்காவை அருங்காட்சியகத்தின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு, பொருளாதார உதவி நாடி தன் குடும்பத்தினரை சந்திக்க சென்று விட்டார். 

மிக மிக கேவலமான, கேட்பவர் உள்ளங்களை கொதிப்படைய செய்யும் நிகழ்வுகள் நடந்தேற ஆரம்பித்தன. 

பரிணாமக் கோட்பாடு மறுபடியும் தன்னுடைய கோர முகத்தை காட்ட ஆரம்பித்தது.

ப்ரான்க்ஸ் மிருகக்காட்சி சாலை:

அருங்காட்சிகத்தில் ஓடா பெங்கா இருக்கும் செய்தி, நியூயார்கின் ப்ரான்க்ஸ் மிருகக்காட்சி சாலையின் (Bronx Zoo) டைரக்டரான வில்லியம் ஹார்னடேவிற்கு (William Hornaday) எட்டியது.

ஹார்னடேவும், அமெரிக்க உயிரியல் கழகத்தின் செயலாளருமான மாடிசன் கிரான்ட்டும் (Madison Grant) சேர்ந்து ஒரு மிகப்பெரிய திட்டத்தை தீட்டினார்கள். அதாவது, டார்வினின் பரிணாம கோட்பாட்டை நிரூபிக்கும் ஆதாரமாக பெங்காவை காட்ட தீர்மானித்தார்கள்.

டார்வினின் கூற்றுப்படி, குரங்(கு போன்ற ஒன்றிலிருந்து)கிலிருந்து வந்தவன் மனிதன். அதாவது, குரங்கு போன்ற உயிரினங்கள் காலப்போக்கில் சிறுகச் சிறுக மாறி பின்னர் மனிதன் வந்தான் என்பது டார்வினின் கருத்து.

டார்வினின் இந்த கூற்றை தான் நிரூபிக்க முயன்றனர் ஹார்னடேவும், கிரான்ட்டும். குரங்கிற்கும், மனிதனிற்கும் இடைப்பட்ட இனமாக (Missing link) பெங்காவை காட்ட தீர்மானித்தனர்.

ப்ரான்க்ஸ் மிருகக்காட்சி சாலைக்கு பெங்காவை அழைத்து சென்றனர். Zoo-வில் உள்ள யானைகளை நிர்வகிக்க தான் (யானைகளை அடக்குவதில் கில்லாடிகள் பிக்மீக்கள்) தன்னை அழைத்து செல்கின்றார்கள் என்று நினைத்தார் பெங்கா. ஆனால், ஒரு ஆதாரமற்ற கோட்பாட்டை நிரூபிப்பதற்காக அவருடைய இனத்தை கேவலப்படுத்த போகின்றனர் என்பது தெரியவில்லை அவருக்கு.

1908-ஆம் ஆண்டு, செப்டெம்பர் 8-ஆம் தேதி அந்த கொடூரமான சம்பவம் நடந்தது. மிருகக்காட்சி சாலையின் குரங்குகள் கூண்டில், குரங்குகளுடன் அடைக்கப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட்டார் பெங்கா. அந்த கூண்டிற்கு மேலே இருந்த விளம்பரப் பலகை இவரை "Missing Link" என்று சொல்லியது.

அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு விலங்கிற்கும் ஒரு குறிப்பு எழுதி கூண்டிற்கு வெளியே மாட்டுவார்களே, அதுபோல பெங்காவை பற்றி எழுதி கூண்டிற்கு வெளியே மாட்டியிருந்தார்கள். ஒவ்வொரு நாளின் மதியமும் பெங்காவை பார்க்கலாமென்றும் அந்த பலகையில் எழுதியிருந்தது.

என்ன கொடுமை இது?...ஒரு மனிதனை இன்னொரு சக மனிதன் இதற்கு மேல் கேவலப்படுத்த முடியாது. இனவெறியின் உச்சக்கட்டம். பின்னணியில் பரிணாமக் கோட்பாடு. தடுப்பதற்கு யாரும் இல்லை. ஏனென்றால், இவர்கள் தாழ்ந்தவர்கள் என்று அறிவியலே சொல்லிவிட்டதல்லவா??

பார்க்கவரும் மக்களை நோக்கி தன்னுடைய வில் அம்பை பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டார் பெங்கா. தன்னுடைய ஊஞ்சற் படுக்கையை அந்த கூண்டிலேயே பயன்படுத்த உற்சாகப்படுத்தப்பட்டார். ஓரங்குட்டான் குரங்கை இடுப்பில் வைத்துக்கொண்டு உலாவ ஊக்குவிக்கப்பட்டார். ஓரங்குட்டான் குரங்கை இடுப்பில் வைத்தவாறு இவர் நிற்கும் காட்சி பார்ப்பவர் உள்ளங்களை துளைப்பதாக உள்ளது.


மக்கள் மத்தியில் மிக பிரபலமானது இந்த நிகழ்வு. ஒரு ஞாயிற்றுக்கிழமையின் போது (Sep 16, 1908), சுமார் 40,000 மக்கள் பெங்காவை பார்த்து சென்றிருக்கின்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பார்க்கவரும் மக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்திருக்கின்றார் பெங்கா. சமயங்களில் ஆத்திரத்துடன் மக்களை நோக்கி தன் அம்பை எறிவாராம்.

இந்த நிகழ்ச்சி அமெரிக்க கறுப்பின மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியது. கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள். தாங்கள் ஏற்கனவே சமூகத்தால் கீழ்த்தரமாக நடத்தப்படும்போது, குரங்குகளுடன் தங்கள் இனத்தவரை அடைத்து வைத்து மேலும் கேவலப்படுத்த வேண்டுமா என்று கொந்தளித்தனர். ஆனால் இவர்களின் நியாயக்குரலை காதுக் கொடுத்து கேட்க (ஆரம்பத்தில்) முன்வரவில்லை நியூயார்க் நகரின் மேயர்.  ஏனென்றால், அறிவியலை தானே நிரூபிக்க முயல்கின்றனர் ஹார்னடேவும், கிரான்ட்டும்?

பெங்காவின் இறுதி நாட்கள்:

மிகக் கடுமையான எதிர்ப்புகளுக்கு பிறகு மிருகக்காட்சி சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார் பெங்கா. இரண்டு வார zoo வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர் அனாதைகள் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு கல்வி கொடுக்கப்பட்டார்.

ஆங்கிலம் பேசுவதற்கும், படிப்பதற்கும் கற்றுக்கொண்டார். மிருகக்காட்சி சாலையில் தனக்கு நேர்ந்த அவமானத்தை மறக்க முடியாமல் தவித்தார். "நானும் மனிதன் தான், நானும் மனிதன் தான்" என்று கூறி தன் மார்பில் அடித்துக்கொள்வாராம் பெங்கா.

ஆப்பிரிக்கா திரும்ப திட்டமிட்டார். அதற்காக வெற்றிலை தொழிற்சாலையில் வேலை செய்து பணம் சேர்த்தார். ஆனால், முதல் உலகப்போர் தொடங்கிவிட, அவரால் ஆப்பிரிக்காவிற்கு திரும்ப முடியவில்லை. இதனால் மன உளைச்சலடைந்த பெங்கா, 1916-ஆம் ஆண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இனவெறியை நியாயப்படுத்தி மற்றொரு உயிரை பலிவாங்கிவிட்டது பரிணாமக் கோட்பாடு.

உலகம் மறந்து போயிருந்த இந்த அசிங்கமான இரகசியத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்பு (1992) வெளிக்கொண்டு வந்தார் வெர்னரின் பேரன். சில ஆண்டுகளுக்கு முன்பு (2009) இதுக்குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டு பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தது சேனல் 4.

பெங்காவின் சோக வரலாற்றை கேட்கும் போது, இயல்பாகவே நம்முள் எழும் கேள்வி...இங்கே யார் தாழ்ந்தவர்கள்? பெங்காவா? இல்லை அந்த பரிணாமவியலாளர்களா?

முடிவாக:

விடைபெறும் முன் இந்த செய்திகளையும் அறிந்துக்கொண்டு செல்லுங்கள்....

1. பெங்காவை மிருகக்காட்சி சாலைக்கு அழைத்து வந்தாரே கிரான்ட்...அவருக்கும் ஹிட்லருக்கும் ஒரு இணைப்பு உண்டு.

கிரான்ட்டின் "The Passing Of The Great Race" என்ற புத்தகம் மிகப் பிரபலமான ஒன்று. இதில், வெள்ளையர்களை இயற்கை உயர்ந்த இனத்தவராக உருவாக்கியிருப்பதால் அவர்கள் தாழ்ந்த நிலை மனிதர்களோடு சேர்ந்து தங்களின் தனித்துவத்தை இழந்துவிடக்கூடாது என்று வாதாடினார் கிரான்ட். இந்த புத்தகம் ஜெர்மன் மொழியில் 1930-ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்ட போது, இந்த புத்தகத்தை பாராட்டி கிராண்டிற்கு ஒரு கடிதம் வந்தது. எழுதியவர் வேறு யாருமல்ல, அடால்ப் ஹிட்லர். இந்த புத்தகத்தை தன்னுடைய பைபிள் என்று குறிப்பிட்டிருந்தார் ஹிட்லர்.

இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. இயற்கை தங்களை உயர் இனத்தவராக ஆக்கியதாக நம்பியவர் தானே ஹிட்லர்?? உயர்ந்த தன்னுடைய இனம், தாழ்ந்த இனத்தோடு சேர்ந்தால், இயற்கையின் ஆயிரமாயிர ஆண்டு கால உழைப்பு வீணாகிவிடும் என்று சொன்னவர் தானே அவர்?

2. இவ்வாண்டின் துவக்கத்தில் (Feb, 2011), Current Anthropology ஆய்விதழில் வெளிவந்த ஒரு ஆய்வுக்கட்டுரை, ஆரம்ப கால மனிதர்களுக்கும் இக்கால மனிதர்களுக்கும் அதிக அளவில் வேறுபாடுகள் இல்லை என்று கூறியது. அதாவது, கற்கால மனிதர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்றும், பின்னர் வந்தவர்கள் அறிவில் சிறந்தவர்கள் என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம் அல்லவா, அது தவறென்று கூறியது அந்த ஆய்வுக்கட்டுரை. மனிதன் தோன்றியதிலிருந்தே அறிவில் சிறந்தவனாகத் தான் இருந்திருக்கின்றானாம்.

3. இம்மாத துவக்கத்தில் (6th Oct 2011), Nature ஆய்விதழில் வெளிவந்த ஒரு புத்தக விமர்சனத்தில், Nature ஆய்விதழின் சீனியர் எடிட்டரான ஹென்றி ஜீ, மனித பரிணாம படத்தை முட்டாள்தனமானது (tosh) என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, குரங்கிலிருந்து சிறுகச் சிறுக மனிதன் வருவதாக படம் பார்த்திருப்போமே, அந்த படத்தை தான் முட்டாள்தனமானது என்று குறிப்பிடுகின்றார் ஹென்றி ஜீ.



பரிணாம கோட்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், கூடிய விரைவில் முழுவதுமாக அது ஒழிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்...
 
My Sincere thanks to:
1. Channel 4.
2. Mail Online.
3. Phillips V. Bradford

References: 
1. Caged in the human zoo: The shocking story of the young pygmy warrior put on show in a monkey house - and how he fuelled Hitler's twisted beliefs - Mail Online, 31st October 2009. link
2. The Human Zoo: Science's Dirty Secret - Channel 4 documentary. link.
3. The Human Zoo: Science's Dirty Secret (p1) - Youtube. link
4. Ota Benga (ca. 1883–1916) - Encyclopedia Virginia. link
5. Ota Benga: The Pygmy Who Was Caged in the Bronx Zoo's Monkey House - Environmental graffiti. link
6. The Scandal at the Zoo - The New York Times, 6th August 2006. link
7. Ota Benga’s Life in Africa, Capture, and Journey to America - Phillips V. Bradford. link 
8. The Pygmy in the Zoo - concentric.netlink
9. Ota Benga - Wikipedia. link
10. Are Pygmies really human? - The Straight Dope, 20th Feb 2004. link
11. Race and People, Extracted from Mein Kampf, volume 1, chapter 11 - Adolf Hitler
12. The Human Zoo:Science’s Dirty Secret - Channel 4 Pdf documents. link
13. Human Zoo, Pygmy peoples, Madisan Grant, William Temple Hornaday, Louisiana Purchase Exposition, John McGee, Bronx Zoo - Wikipedia.
14. Earliest humans not so different from us, research suggests - 14th Feb 2011, Physorg.com. link
15. Palaeoanthropology: Craniums with clout - Nature 478, 34 (06 October 2011) doi:10.1038/478034a. link
16. Henry Gee in Nature: “We know that, as a depiction of evolution, this line-up is tosh. Yet we cling to it.” - Uncommon Descent, 6th December 2011. link
17. Prejudices in ideas about human evolution - arn.org, 10th Oct, 2011. link
நன்றி:
ஆஷிக் அஹ்மத் அ.

Engr.Sulthan
 
Copyright © 2010 ITT Information. All rights reserved.